தனது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட “எம். ஸ். தோனி; தி அன்டோல்டு ஸ்டோரி” படத்தின் இரண்டாம் பாகத்தின் எடுக்க மறுத்த தோனி அதற்கு அவர் கூறும் சுவாரஸ்யமான காரணம்.
“எம். ஸ். தோனி; தி அன்டோல்டு ஸ்டோரி:
இந்த படம் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி எடுக்க பட்ட படம் ஆகும். இந்த படத்தில் தோனியின் வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்தார். இந்த படம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளி வந்தது . இந்த படத்தின் மூலம் சுஷாந்த் பிரபல நடிகர் ஆக மாறினார். இந்த படத்தை நீரஜ் இயக்கியுள்ளார். இந்த படம் 2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையை கைப்பற்றுவதுதோடு முடிந்து விடும்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த படம் வெளியானதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவதற்கான பேச்சு எழுந்தது. இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எடுத்து இருந்தாலும் அதில் சுஷாந்த் சிங் தான் நடித்திருப்பார் என்றும் எதிர்பார்க்கபட்டது. ஆனால் இரண்டாம் பாகம் வேண்டாம் என்று தோனி மறுத்துள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு..!
இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கு எதற்காக மறுப்பு தெரிவித்தார் என்று சுவாரஸ்யமான தகவல் ஒன்றினை கூறியுள்ளார். “என் வாழ்க்கையை வைத்து படம் எடுக்க போவதாக சொன்ன போது எதை வைத்து படம் எடுப்பார்கள் என்று தான் யோசித்தேன். ஏனெனில் என் வாழ்வில் வில்லன்களே கிடையாது. என் வாழ்கை நிகழ்வுகளை வைத்து தான் கதையையும் படத்தையும் எடுத்தார்கள். ஆனால் 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு என் வாழ்வில் வில்லன்கள் மட்டுமே உள்ளனர். 2011 பிறகு சர்ச்சைகள் மட்டுமே உள்ளது. அதனால் தான் வேண்டாம் என்று மறுத்தேன்” என்று கூறி உள்ளார்.