நிர்பயா குற்றவாளிகளுக்கு ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனை தள்ளிபோனதை தொடர்ந்து வரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால் மீண்டும் தண்டனை தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
நிர்பயா வழக்கு விபரம்:
டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார்.
தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.எஞ்சியுள்ள நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 முறை தள்ளிப்போன தூக்கு:
குற்றவாளிகளுக்கு ஜனவரி 22, பிப்ரவரி 1 மற்றும் மார்ச் 3 என தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. பின்பு மார்ச் 20ம் தேதி கட்டாயம் தூக்கிலிடப்படுவர் என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் முகேஷ் குமார் மரண தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு, கருனை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது குற்றவாளிகள் 3 பேர் நெதர்லாந்து நாட்டில் ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி வழக்கு தொடர்ந்து உள்ளதால் இந்த முறையும் தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகமே என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |