தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அரசு ஊழியர்களில் 50% நபர்களை, வீட்டிலிருந்து பணியாற்ற, டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு அறிவிப்பு:
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் சமீப தினங்களாக, காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்தும், இன்னும் காற்று மாசு குறைந்த பாடில்லை. கட்டுக்கடங்காமல் தீவிரமாகி வரும் இந்த காற்று மாசு நடவடிக்கையை, குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த காற்று மாசு காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இது போக, மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களில், 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணியாற்ற டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை., மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவு – டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு!!
இது குறித்த அறிவிப்பை மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர் கோபால் ராய் வெளியிட்டுள்ளார். கடந்த கொரோனா காலகட்டத்தில், அரசு ஊழியர்கள் இதே போல் சுழற்சி முறையில் பணிக்கு அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.