பள்ளிகளுக்கு விடுமுறை., மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவு – டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு!!

0
பள்ளிகளுக்கு விடுமுறை., மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவு - டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு!!

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும், மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக, முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு:

பேரிடர் மற்றும் வறட்சி காலங்களில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க அரசு அதிரடி முடிவுகளை எடுப்பது வழக்கம். அந்த வகையில், நம் நாட்டின் தலைநகரான டெல்லியில், கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தான், தீபாவளி பண்டிகையின் போது மாநில முழுவதும் பொதுமக்கள் வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், தற்போது வரை இந்த காற்று மாசு பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள பொது மக்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு, மாநில முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக TET தேர்வர்கள் கவனத்திற்கு – 2ம் தாள் தேர்வுக்கான தேதி வெளியீடு! தேர்வு வாரியம் அறிவிப்பு!!

இதை ஏற்று, தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட வேண்டும் எனவும், காற்றின் தரம் மேம்பட்டவுடன் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் . அரசின் இந்த அதிரடி அறிவிப்பால், மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here