கார்த்திக்கு வந்த சரியான ஆப்பு.., உண்மையை தெரிந்து கொண்ட அனு.., விறுவிறுப்பாகும் சுந்தரி சீரியல்!!

0
கார்த்திக்கு வந்த சரியான ஆப்பு.., உண்மையை தெரிந்து கொண்ட அனு.., விறுவிறுப்பாகும் சுந்தரி சீரியல்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் கார்த்திக் எப்படியோ பல சூழ்ச்சிகளை செய்து அனுவையும், சுந்தரியையும் பிரிந்துவிட்டார். இதனால் சுந்தரி அனுவை எப்படி சமாதான படுத்துவது என்ற குழப்பத்தில் இருக்கிறார். இதை சரி செய்வதற்குள் அடுத்து ஒரு பிரச்சனை பூகம்பம் போல் வெடித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்போது வெளியாகி ப்ரோமோவில் கார்த்திக் இன்னொரு திருமணம் செய்து கொண்ட விஷயம் சுந்தரி குடும்பத்தில் அனைவருக்கும் தெரிய வருகிறது. உண்மையை தெரிந்து கொண்ட கார்த்திக் அம்மா சுந்தரியிடம் என் மகன் உன்ன விட்டுட்டு இதே ஊர்ல வேற ஒரு குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான் என அழுது கொண்டே சொல்கிறார். இதை கேட்ட சுந்தரி இவங்களுக்கு எப்படி தெரிஞ்சுச்சு என அதிர்ச்சி அடைகிறார்.

சிவகார்த்திகேயனின் மாமியாரை பார்த்துள்ளீர்களா? முக்கிய விழாவில் எடுத்துக்கொண்ட ஃபேமிலி போட்டோ!!

இதுக்கடுத்துதான் சுந்தரி சீரியல் சூடுபிடிக்க போகிறது. அதாவது உண்மையை தெரிந்து கொண்ட சுந்தரியின் மாமா முருகன் கண்டிப்பாக சும்மா இருக்கமாட்டாராம். அதுவும் கார்த்திக் 2 வது திருமணம் செய்து கொண்டது அனுவை தான் என்ற விஷயம் மட்டும் தெரிந்தால் அங்கு சென்று சண்டை போடுவாராம்.

இதனால் கார்த்திக்கின் சுயரூபத்தை தெரிந்து கொள்ளும் அனு என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. இப்படி பல பிரச்சனைகளை சுந்தரி சமாளிப்பாரா?? மாட்டாரா?? என இனி வரும் எபிசோட்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here