இந்திய கிரிக்கெட் அணி T20 உலக கோப்பை போட்டிகளில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தேர்வுக்குழு, கேப்டன்ஷிப் என பல மாற்றங்களை BCCI அறிவித்து வருகிறது. இதையடுத்து இன்று நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் சமீப காலமாக சீனியர் வீரர்களின் சொதப்பல் ஆட்டம் தொடர்வதால் உலக கோப்பை போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணி களமிறங்க பல்வேறு திட்டங்களை BCCI மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பான IPL T20 போட்டிக்கான அணி வீரர்களை சமீபத்தில் கொச்சியில் நடந்த ஏலத்தில் உரிமையாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிசிசிஐ தலைவராக பணியாற்றிய தாதா சவுரவ் கங்குலி சிலசர்ச்சைகளுக்கு பிறகு பதவி விலகினார். இதையடுத்து 2019ல் IPL போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் பணியாற்றிய கங்குலி வரவிருக்கும் தொடரின் போதும் அதே அணியின் இயக்குனராக மீண்டும் பணியாற்ற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.