பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந்த சமயத்தில், வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு :
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பெரும்பாலான மக்கள் கூட்டம், பேருந்து நிலையங்களில் நிரம்பி வழிவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கான முன்பதிவு கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பெரும்பாலான மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான முன்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை 50,000க்கும் மேற்பட்ட நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை சார்பில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
தியேட்டர் விதிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.., உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
இந்தக் கூட்டத்தில் வரும் ஜனவரி 12 முதல் 14 வரை தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.