தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த அளிக்கப்பட்டு இருந்த கால அவகாசத்தை நீட்டித்து உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்ட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வருமானம் இன்றி தவித்தனர். எனவே மாநிலம் முழுவதும் மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கால அவகாசம் முடிவடைந்து உள்ள நிலையில் அதனை நீட்டிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் தமிழக அரசு சார்பில் தற்போது பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
34 பயணிகள் ரயில் எக்ஸ்பிரசாக மாற்றம் – இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!
அதில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களில் ஜூன் 30 வரை மின் கட்டணம் வசூலிக்கும் மையங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆன்லைன், பேமென்ட் கேட்வே வாயிலாக கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம். ஜூன் 19 முதல் 30 வரை மின்கணக்கீட்டு தேதி உள்ளவர்களுக்கு முந்தைய மாத அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ஜூலை 15 வரை மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.