IPL 2023 தொடரின் 16 வது சீசனுக்கான லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது. இதற்கான முதல் போட்டியில் CSK மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதனால் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பில் இரு அணி ரசிகர்களுக்கு உள்ளனர். இந்நிலையில் சென்னை அணி முதன் முறையாக சின்ன தல சுரேஷ் ரெய்னா இல்லாமல் களமிறங்குகிறது.
ஐபிஎல் வரலாற்றில் குவாலிபயர், எலிமினேட்டர் மற்றும் ஃபைனல்ஸ் என பிளே ஆப் சுற்றின் அனைத்து போட்டிகளிலும், ஆட்ட நாயகன் விருதை வென்ற ஒரே வீரர் இவர் தான். இதனால் இவர் இல்லாமல் CSK அணி களமிறங்குவது வருத்தத்தை அளித்தாலும், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.