பாலிவுட் திரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கோவாவை நோக்கி வந்த மும்பை கப்பல் ஒன்றில் பயணம் செய்யும் போது அதில் போதை பொருள் விருந்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த கப்பலில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து ஆர்யனை கைது செய்திருந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் 3 வாரங்களுக்கு பிறகு ஆரியன் ஜாமினில் வெளிவந்தார். இதற்கிடையில் ஆர்யனை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி ரூ. 25 கோடி பணத்தை போதை பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வான்கடே கேட்டுள்ளார் என சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இதற்கான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், சமீர் வான்கடே ஆஜராகவில்லை.
நச்சுன்னு இருக்கு நாட்டு கோழி மேனி., கிரணின் அந்த கிளாமர் அழகை ரசித்து வெடவெடத்து போன இளசுகள்!!
மேலும் தான் 20 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதாகவும், அதுவரை தன் மீது சிபிஐ கைது நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிடும்படி நீதிமன்றத்திற்கு மனு ஒன்றை சமீர் கொடுத்திருந்தார். அதன்படி கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமை சமீர் சிபிஐயில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை இவரை மீது கைது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.