இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசனுக்கான முதல் பிளே போட்டி இன்று (மே 23) நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் சேப்பாக்கத்தில் மோத உள்ளன. இந்த இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் இதுவரை 3 போட்டிகளில் மோதின.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியே 3 முறையும் வென்றுள்ளது. இதனால், தோனி தலைமையிலான CSK அணியானது இன்றைய போட்டியில், வென்று இந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பத்துடன் இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, தோனி இந்திய அணியில் இருந்த போது கூறிய அறிவுரை ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார்.
50 ஓவர் உலக கோப்பைக்கான அட்டவணை வெளியீடு…, 2 குரூப்களாக பிரிக்கப்பட்ட அணிகள்…, முழு விவரம் உள்ளே!!
அதாவது, “எப்போதும் உங்கள் தனிப்பட்ட ஸ்கோரைப் பார்க்க வேண்டாம், அணியின் ஸ்கோர்கார்டைப் பாருங்கள். உங்கள் அணிக்கு உங்களிடமிருந்து என்ன தேவை என்பதே முக்கியம்.” என்று தோனி கூறிய இந்த அறிவுரை என் மனதில் பதிந்துவிட்டது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மேலும், “நான் எப்போதும் தோனி ரசிகனாகவே இருப்பேன். அவர் எனக்கு அன்பான நண்பர் மற்றும் சகோதரர்.” என்றும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.