மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 1,022 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை UPSC தேர்வாணையம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதில் முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என 3 படிநிலைகளிலான தேர்வுகள் கடந்த மே மாதம் வரை நடைபெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைத்தொடர்ந்து UPSC தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் IAS பதவியில் 180 பேரும், IPS பதவியில் 200 பேரும் என மொத்தமாக 933 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடத்தில் இஷிதா கிஷோர், 2ம் இடத்தில் கரிமா லோஹியா, 3 ம் இடத்தில் உமா ஹராதி, 4வது ஸ்மிருதி மிஸ்ரா என முதல் 4 இடங்களை பெண் தேர்வர்களே பெற்றுள்ளனர்.
இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய மாநில அரசு தலைவர்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான UPSCன் முதல்நிலைத் தேர்வு மே 28ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.