ஜூன் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
ஜூன் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த முறை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்த காரணத்தால், ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்திலேயே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், இன்றளவும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் புதிய கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆகுமோ என்ற கேள்வி அதிக அளவில் எழுந்து வந்தது. இந்நிலையில், கேரள மாநில முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் வெளியாகி உள்ளது.

வட போச்சே.., முக்கிய நட்சத்திரத்தை இழந்து தவிக்கும் CSK அணி.., GT அணிக்கு எதிராக வெற்றி கிடைக்குமா??

அதாவது, கேரளாவில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட கட்டிட பராமரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்த கூடிய மரங்கள் சுவர்களை அகற்றுதல் பணிகள் நடைபெற்று வருவதால் ஜூன் 5ம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஜூன் 5ம் தேதி 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here