சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, நியூசிலாந்தின் கைல் ஜேமிசனுக்கு பதிலாக, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரை அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது.
CSK
ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்காக, ஒவ்வொரு அணியையும் வலுவாக கட்டமைப்பதற்காக, கடந்த டிசம்பர் மாதமே மினி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின் மூலம், அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை அதிக விலை கொடுத்து போட்டி போட்டு வாங்கி வைத்துள்ளனர். இதில், சில வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல்லின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது, வெளிநாட்டு வீரர்கள் பலர், அவர்களது சர்வதேச அணிக்காக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதில், குறிப்பாக CSK அணிக்காக ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்ட நியூசிலாந்தின் கைல் ஜேமிசனுக்கு, தற்போது முதுகில் எலும்பு முறிவுக்கு ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடரை இழக்க உள்ளார்.
IND vs AUS 2nd ODI: இந்திய அணியின் தோல்விக்கு பின் உள்ள சாதனைகளின் சில துளிகள் உள்ளே!!
இதனால், இவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலாவை அடிப்படை விலை 50 லட்சத்துக்கு CSK அணி ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் CSK அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் CSK அணியில் ஸ்டோக்ஸ், மொயின், பிரிட்டோரியஸ், சான்ட்னர், கான்வே, தீக்ஷனா, பத்திரனா, மகலா உள்ளிட்ட 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
Magizhchi, Magala! Roar proud. ?#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/Hn3A94CcFa
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2023