டிக் டாக் இல் சர்ச்சை பேச்சு-இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் மீது புகார்

0
Yuvaraj & Chahal
Yuvaraj & Chahal

முன்னாள் இந்திய அணிக்காக விளையாடிய வீரர் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா டிக் டாக் கலந்துரையாடலின் போது சகவீரர்கள் ஆன சாஹல் மற்றும் குல்தீபை வடஇந்திய மக்களை குறிக்கும் சாதிய பெயரை கூறி இழிவு படுத்தியதாக யுவராஜின் பெயரில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்திய வீரர் யுவராஜ்:

யுவராஜ் முன்னாள் இந்தியா கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ஆவர். இவர் இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளரும் பஞ்சாபி நடிகருமான யோகிராஜ் சிங் மகன் ஆவர். இவர் இந்தியா அணிக்காக 2017 ஆம் ஆண்டு கடைசியாக விளையாடினர். 2011 உலகக்கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

பரவலான வீடியோ:

கிரிக்கெட்டில் இந்தியா அணிக்காக விளையாடிய வீரர்கள் யுவராஜ் சிங் 38, மற்றும் ரோஹித் சர்மா 33, ஆகிய இருவரும் டிக் டாக் இல் கலந்து உரையாடினார்கள். அதில் இந்திய அணியின் சகா வீரர்கள் ஆன சாஹல் மற்றும் குல்தீபை யுவராஜ் வடமக்களை குறிக்கும் சாதிய பெயரை பயன்பத்தி பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த தலித் உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரஜத் கல்சன் காவல் நிலையத்தில் யுவராஜ் பெயரில் புகார் அளித்து உள்ளார்.

Yuvaraj & Chahal
Yuvaraj & Chahal

இதனிடையே குறிப்பிட்ட அந்த விடியோவை நெட்டிசென்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து உள்ளது யுவராஜ் மற்றும் ரோஹித்தை சிக்கலில் மாட்ட வழிவகுத்து உள்ளது. இந்த வீடியோவில் ரோஹித் சர்மா யுவராஜின் பேச்சிற்கு எந்த கருதும் தெரிவிக்காமல் சிரித்து கொண்டு இருந்தது குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here