இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் தற்போது கிரிக்கெட் தொகுப்பாளினி சஞ்சனா கணேஷினியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இதனை அடுத்து அந்த தகவல் இணையத்தில் வைரலாக பிறவி வருகின்றது.
இந்திய வீரர் பும்ரா
இந்தியா அணியின் முன்னணி பந்து வீச்சாளராக தற்போது இருந்து வருபவர் தான், பும்ராஹ். இவர் அடுத்து நடக்க இருக்கும் எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் டி 20 போட்டிகளிலும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. தனது சொந்த காரணங்களுக்காக தான் பும்ராஹ் தேர்வு செய்யப்படவில்லை என்று பலரும் கூறி வந்தனர். இப்படியாக இருக்க அவர் அப்படி எந்த சொந்த காரணத்திற்காக போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.
குக் வித் கோமாளியில் வெளியேறப்போவது அஸ்வினா?? பவித்ராவா?? இணையத்தில் கசிந்த தகவல்!!
அதற்கான காரணமாக பிசிசிஐ அமைப்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு செய்தியினை வழங்கி உள்ளது. அது என்னவென்றால், பும்ராஹ் இன்னும் சில நாட்களில் கோழி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பதே ஆகும். இதனை அடுத்து அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபர் யார் என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. அவர் கிரிக்கெட் தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. தற்போது தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசிக்கும் பும்ரா முதலில் மும்பை சென்று விட்டு பின்பு கோவாவில் தனது திருமணத்தை செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த செய்தி குறித்து பும்ராஹ் மற்றும் சஞ்சனா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில் இது போன்ற தகவல்கள் சமூகவலைத்தளங்களில் உலவி வருகின்றன. கூடுதலாக, சஞ்சனா தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சனா தொகுப்பாளினியாக இருப்பதற்கு முன்பாக மாடலிங் துறையில் இருந்துள்ளார்.