இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இதற்கான பில்லிங் சுழற்சி மற்றும் பில் செலுத்த வேண்டிய தேதியை வங்கி நிறுவனங்களே தீர்மானிக்கின்றனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்களும், குறிப்பிட்ட நேரத்தில் பணம் செலுத்த பல்வேறு சிரமங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிக்பாஸ் ரசிகர்களே ரெடியாகுங்க.., BB சீசன் 7 கொண்டாட்டம் தயார்.., எப்பன்னு தெரியுமா?
அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு பில் சுழற்சி மற்றும் பில் செலுத்த வேண்டிய தேதியை, ஒரு முறையாவது விருப்பப்படி தேர்வு செய்யலாம். இந்த புதிய வசதியை பயன்படுத்துவதற்கு முன்னதாக, கடந்த கால நிலுவைத் தொகையை செலுத்தி இருக்க வேண்டும். இதன்பிறகு கிரெடிட் கார்டு நிறுவனத்தின் தொலைபேசி (அ) மின்னஞ்சல் மூலமோ அல்லது வங்கி மொபைல் ஆப் மூலமாகவும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.