கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் அனுமதி அளித்துள்ளார்.
தற்போது உள்ள கொரோனா சூழலில் அனைத்து நாடுகளின் மக்களும் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கே அலை மோதுகின்றனர். ஒவ்வொரு நாட்டு அரசும் தங்களின் மக்களை காப்பாற்ற தடுப்பூசியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் (ICMR) கொரோனா தடுப்பூசி தொடர்பான ஒரு ஆய்வை நடத்தியது. அதன் முடிவில் இருவேறு வகையான கொரோனா தடுப்பூசிகளை ஒருவர் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என தெரிவித்தது.
எனவே அதை தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் வேணுகோபால், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய தற்போது அனுமதி அளித்துள்ளார். இந்த ஆய்வின் முடிவுகள் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒரு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்