தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஆமை வேகத்தில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் – தலைமை செயலர் கடிதம்!!

0

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்று தலைமை செயலாளர் வெ. இறையன்பு அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தடுப்பூசியை அதிகரியுங்கள்:

மாநிலத்தில் பல இடங்களில் கொரோனா பெருந்தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.  இதனால், தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  இது வரை லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம், அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தடுப்பூசி பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் இங்கு தடுப்பூசி செலுத்துதல் பணியை அதிகரியுங்கள் என்று தலைமை செயலாளர் வெ. இறையன்பு அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மேலும், தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாநிலங்கள் இந்த பணிகளில் முதலிடத்தில் உள்ளதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here