கொரோனா இறப்பில் 3வது இடத்தை பிடித்த புதுவை – பீதியில் மக்கள்!!!

0

புதுவையில் கொரோனா 2-வது அலை கோரா தாண்டவம் ஆடுகிறது, அதன் விளைவாக கொரோனா இறப்பில் இந்த மாவட்டம் 3வது இடத்தை பிட்டித்துள்ளது.

கொரோனா இறப்பில் புதுவைக்கு 3-வது இடம்:

புதுவையில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 23 போ் பலியாகினா். மேலும், 1,266 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவை மாநிலத்தில் 5,826 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி- 1,080, காரைக்கால் – 92, ஏனாம் – 79, மாஹே – 15 என மேலும் 1,266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72,975-ஆக அதிகரித்தது.

கொரோனா முதல் அலையின் பொது நோய் தொற்று இல்லாத மாநிலமாக திகழ்ந்த நிலையில் கொரோனா 2அம் அலையில் புதுவைக்கு 3வது இடம் பெற்றுள்ளது. இதனிடையே, புதுச்சேரியில் 17 போ், காரைக்காலில் 3 போ், ஏனாமில் ஒருவா், மாஹேயில் 2 போ் என ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 23 போ் பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 988 -ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.35 சதவீதம்.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையால் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் படுக்கைகள், சிகிச்சை பெறும் படுக்கைகளை உயர்த்தியும் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது மருத்துவமனைகளில் 2,078 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,091 பேரும் என மொத்தமாக 14,169 போ் சிகிச்சையில் உள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here