முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் !!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு தொழில் நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலில் தமிழகம் 3ம் இடத்தில உள்ள நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதித்தோர்களிடம் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து உள்ளது. மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தவும் தமிழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார். வங்கி இணைய சேவை, கடன் அட்டை, பற்று அட்டை மூலமாக நன்கொடை வழங்கலாம். வங்கி கணக்கு எண் : 117201000000070, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை செயலகம், சென்னை-09 என்ற வங்கி கணக்கிலும் செலுத்தலாம். RTGS மற்றும் NEFT மூலமாகவும் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் எனவும் அறிவித்துள்ளார்.
tncmprf@iob என்ற UPI ID ஐ பயன்படுத்தி கூகிள் பே மற்றும் போன் பே மூலமாகவும் அனுப்பலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. செலவினங்கள் வெளிப்படைத்தன்மை உடன் இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.