டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா உறுதி – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவு..!

0

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் 19 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – 600ஐ நெருங்கிய உயிரிழப்புகள்..!

இருந்தாலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா அறிகுறி இல்லாமலேயே பலருக்கு நோய்த்தொற்றுக்கு ஏற்பட்டுள்ளது.

125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்..!

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பாதிப்பு – டாக்டர் உட்பட இருவர் உயிரிழப்பு..!

அத்துடன் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என 125 குடும்பங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here