இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில் மே மாதம் இந்தியாவில் கொரோனா தாக்கம் உச்சத்தை அடையும் எனவும் அதன் பின்னர் படிப்படியாக குறையும் எனவும் ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஆய்வு முடிவுகள்:
சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் பத்திரிகை குழுமம் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதில் அமெரிக்கா, இத்தாலியில் நேரிட்ட பாதிப்பை அடிப்படையாக கொண்ட சதவீத மதிப்பீடு உள்ளிட்ட 3 மாதிரிகளை கணக்கில் கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது. அதில் மே மாதம் 22 ஆம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கணிக்க குழு மூன்று மாதிரிகளை உருவாக்கியது. இந்தியாவில் மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பாதிப்பு பூஜ்யமாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும், மே 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால், ஜூன் மாத மத்தியில் பூஜ்யமாக குறைய வாய்ப்புள்ளது எனவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |