2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா என்னும் விச கிருமியால் இன்று உலக நாடுகள் அனைத்தும் நிலை தடுமாறியுள்ளது அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இத்தாலி, பிரேசில், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகள் மிகவும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன.அந்நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி விட்டனர்.லட்கணக்கானவர்களுக்கு தொற்று பரவியுள்ளது.இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக சீனாவில் கொரோனா பரவாமல் இருந்தது.ஆனால் இப்பொழுது சீனா பிய்ஜிங்கில் கெரோனா மீ்ண்டும் பரவ தொடங்கி உள்ளது
மீண்டும் சீனாவில் கொரோனா
சீனாவில் 83,132 பேர் பாதித்துள்ளனர். அங்கு தற்போது வரை 78,369 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4,634 பேர் வைரசுக்கு பலியாகி உள்ளனர். சில நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தனர்.பரவலும் இல்லாமல் இருந்தது ஆனால் கடந்த இரு தினங்களாகப் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 10 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் 40 உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 36 பாதிப்புகள் பீஜிங்கில் பதிவாகி உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
சீனாவில் மீண்டும் ஊரடங்கு
இதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. சீனாவின் துணைப் பிரதமர் சன் சுன்லன் “தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு” அழைப்பு விடுத்துள்ளார், ஏனெனில் ஒரு நேற்று பிற்பகுதியில், அனைத்து அரசு குகாதார நிறுவனங்களும் ஜின்ஃபாடி உணவு சந்தைக்கு வருகை தந்த அல்லது அங்கு இருந்த எவருடனும் தொடர்பு கொண்டிருந்த ஊழியர்களை 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலை மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டது. சந்தை மூடப்பட்டது. அதைச் சுற்றியுள்ள பல குடியிருப்பு தோட்டங்கள் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.”பீஜிங் ஒரு அசாதாரண காலத்திற்குள் நுழைந்துள்ளது” என்று நகர செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் தெரிவித்து உள்ளார்
உலகளவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் விவரம்
உலகளவில் இதுவரை 1,918,855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 448,998 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119,588 ஆக உள்ளது.