கொரோனா வைரஸ் காரணமாக நேபாளத்தில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மின்னல் வேகத்தில் தாக்கும் கொரோனா..!
நேபாளத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு ஒரே நாளில் 535 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 561 ஆக உயர்ந்துள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஆண்களை குறிவைக்கும் கொரோனா..!
நேபாளத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு பெண்கள் 894 பேர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8,667 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.