சிக்கன் கடனுக்கு தராததால், வாட்ஸ்ஆப்பில் கொரோனா வதந்தி கிளப்பி வியாபாரத்தை காலிபண்ணிய சிறுவன்..!

0

கறிக்கடையில் கடனுக்கு சிக்கன் தராததால் அதில் கொரோனா வைரஸ் உள்ளதாக வாட்ஸ்ஆப்பில் பொய்யான தகவல்களை ஷேர் செய்து கோழிக்கறி வியாபாரத்தை காலிபண்ணிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் பாதிப்பா..?

கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 2700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். உலகமெங்கும் 47 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இந்தியாவில் யாருக்கும் ஏற்படவில்லை. இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள இறைச்சி கடையில் பிராய்லர் இறைச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக ஒரு தகவல் பரவியது.

கடன் தராததால் வதந்தி பரப்பிய சிறுவன்..!

வாட்ஸ்ஆப்பில் பரவிய அந்த தகவலில் ‘நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள தனியார் சிக்கன் சென்டரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பாண்டி என்பவர் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று ஒரு தகவல் தீயாக பரவியது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் யாரும் சிக்கன் வாங்கவில்லை. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (15) என்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர் கறிக்கடையில் சிக்கன் கடனுக்கு தராததால் பொய்யான தகவல்களை பரப்பியதாக புகாரில் கூறப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here