சீனாவின் ஹவான் நகரில் தோன்றி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு சீனாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 24000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்கிய தாய்க்கு பிறந்த குழந்தைக்கு 30 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய சோக சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
கர்பகாலத்திலேயே தொற்று…!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
சீனாவில் ஹவான் நகரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கும் வைரஸ் தாக்கி விட கூடாது என்பதற்காக மருத்துவர்கள் மிக கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் குழந்தை பிறந்து அடுத்து 30 மணி நேரத்தில் அந்த குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தோற்று உள்ளது உறுதி ஆகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் உயிரி ஆயுதமா (Bio-Weapon) கொரோனா வைரஸ்..? தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா..!
கர்ப்ப காலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு தொற்று பரவி இருப்பதை இது குறிபபதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதிகம் பாதிக்கப்பட்டோர்..!
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்தோர்களில் 80 சதவீதம் பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 20 சதவீதம் பேர் இளம் வயதினர் என்பதும் தெரியவந்து உள்ளது. இது முதியோர்களை எளிதில் தாக்கும் தன்மை உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |