தமிழகத்தில் புதியதாக 1442 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
சுகாதாரத்துறை இன்று கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. இந்த கொரோனா பரவல் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் இன்று எடுக்கப்பட்ட கொரோனா நிலவரப்படி இன்று ஒரேநாளில் 1442 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 7,77,616 ஆக உயர்ந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுவரை கொரோனாவுக்கு 7,54,826 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1494 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 12 பேர் இன்று ஒரேநாளில் இறந்துள்ளனர். ஆகையால் மொத்த உயிரிழப்பு 11,681 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 61,610 பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.