குட்கா போன்ற போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்துபவர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பு :
கடந்த சில தினங்களாக மக்கள் திரும்பவும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பி வருகின்றனர். யாரும், கொரோனா காலதடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. இது கொரோனா மீண்டும் பரவ வழிவகை செய்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ அறிக்கை:
கொரோனா குறித்து பல எச்சரிக்கைகள் மருத்துவ குழுக்களால் அவ்வப்போது வெளியிடப்படுகிறது. தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குட்கா, புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் மூலமாக கொரோனா அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விதிமுறைகள் மீறல்:
தமிழகத்தில் குட்கா, புகையிலை மற்றும் கஞ்சா போன்ற பொருட்களுக்கு தடை உள்ளது. ஆனாலும், கஞ்சா, கூல் லிப் போன்ற பொருட்களின் விற்பனையை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஆந்திர மாநிலத்தில் இருந்து தான் அதிக அளவில் இந்த போதை பொருட்களை கடத்தகாரர்கள் கடத்துகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிகரெட் விற்பனையிலும் தடை உத்தரவை மீறி தான் விற்பனை நடக்கின்றது என்று தெரிகிறது.
கொரோனா பரவல்:
இப்படி போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் மக்கள் செல்லும் வழி இடங்களில் எச்சில் துப்புகின்றனர். இதன் மூலமாக மற்றவர்களு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. பொது இடங்களில், மாஸ்க் அணியாமல் சிகரெட் பயன்டுத்துவது, மாஸ்க் பயன்படுத்தாமல் புகைப்பது போன்ற செயல்களால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.
எஸ்.பி.பி அவர்கள் பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் – ரஜினிகாந்த் உருக்கம்!!
இப்படி செய்வதால் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவர் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.