ஞாயிற்று கிழமையிலும் கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் – தமிழக அரசு அதிரடி!!

0

தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் கொரோனா காலத்தில் மக்களின் நலன் கருதி கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா நிவாரண தொகை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பல அறிக்கைகளை வெளியீட்டு வருகிறார். அதன்படி தமிழக அரிசி அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அதில் முதல் தவணையாக ரூ.2000 இந்த வாரமே வழங்கப்படும் என்றும் அறிவித்தார். நிவாரண தொகைக்காக மக்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் என்றும் டோக்கன் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆராய தாசில்தார் ஆய்வு மேற்கொள்ளவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

கடுமையான சரிவை கண்ட பங்குச்சந்தை – கலக்கத்தில் வர்த்தகர்கள்!!

இந்நிலையில் கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் ஞாயிற்று கிழமைகளிலும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு வருகிற மே மாதம் 16ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான விடுமுறை தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்று கிழமை அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here