இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக அனைத்து வகையான தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்:
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை நிலவரம் உச்சத்தையும் சரிவையும் கண்டு வருகிறது. இதனால் வர்த்தகர்கள் கடுமையான குழப்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி பங்குச்சந்தை முடிவுக்கு வரும் பொழுது உச்சத்துடன் வர்த்தகத்தை முடித்து கொண்டது. இதனால் வர்த்தகர்கள் குஷி அடைந்தனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால் இன்றைய நிலவரப்படி வர்த்தகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் பங்குச்சந்தை முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 340.60 புள்ளிகள் சரிந்து 49.161.81 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 91.60 புள்ளிகள் சரிந்து 14,805.75 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவுக்கு வந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘மக்களுடன் இணைந்து நிற்க வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!!
தற்போது பங்குச்சந்தை மிக கடுமையான சரிவை கண்டுள்ளதால் வர்த்தகர்கள் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே நாட்டில் தற்போது கொரோனா நோய்பரவல் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து விடுமா என்று அனைவரும் அச்சமடைந்து வருகின்றனர்.