நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்ற ஆட்சி அமைத்த தி.மு.க கட்சி தலைவரும் முதல்வருமான ஸ்டாலினும் அவரது அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து காப்பதை முழுமுதற் கடமையாக கருதி செயலாற்ற வேண்டும் என புது எம்.எல்.ஏ.,க்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கமல் வைத்த கோரிக்கை:
நடந்து முடிந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க அணி வெற்றி பெற்றது. கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அவர்களை தொடர்ந்து 33 அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கூடியது. அப்போது, புது எம்எல்ஏ.,க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இந்த பேரிடர் காலத்தில் மக்களை பாதுகாக்கும் பணி நம்முடையது என்பதை நினைவூட்டும் வகையில் அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாக கருதி செயலாற்றும்படி கோரிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முதல் கடமையாக கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்