சோனியா காந்தியை கண்டித்தது ஜேபி நட்டா கடிதம் எழுதியுள்ளார்…!!!

0
சோனியா காந்தியை கண்டித்தது ஜேபி நட்டா கடிதம் எழுதியுள்ளார்...!!!
சோனியா காந்தியை கண்டித்தது ஜேபி நட்டா கடிதம் எழுதியுள்ளார்...!!!

கொரானா பரவலை தடுக்கவும் ஒழிக்கவும் போராடிக் கொண்டிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆனால் அவர் மீது அவதூறு  பரப்பி வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா பதில் கடிதம் எழுதியுள்ளார்.

சோனியாவுக்கு நட்டா கடிதம்

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பற்றி பேசி வந்தனர்.பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவுக்கன எந்த ஒரு நடவடிக்கையும் எதுவும் பண்ணவில்லை என்று பிரதமர் ஆட்சியை பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தனர் இதனை கேள்விப்பட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவரான  ஜேபி நட்டா சோனியா காந்தியை கண்டித்தும் அவர் பேசியத்தார்க்கு பதில் தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்று இன்று எழுதினார் அதில் அவர் கூறியது

சோனியாக்கு நட்டா கடிதம்..
சோனியாக்கு நட்டா கடிதம்..

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான நல்ல பணிகளை சீராகவும் சிறப்பாகவும் செய்து வருகிறார் இதனை நீங்கள் அறியாமல் அவர் மீது குற்றச்சாட்டுவது மற்றும் அவதூறு பரப்புவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அணைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவது போல வேற எந்த வெளிநாடுகளிலும் இதுவரை செலுத்துவதற்கு யாரும் முன்வரவில்லை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்தியாவில் மட்டும் தான் முன்னுரிமை கொடுத்து இளைஞர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது அதே போல் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தில் செலுத்துவதற்கான திட்டத்தை தீட்டி வருகின்றன அதேபோல் இலவசமாக தடுப்பூசியை காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று கேள்விகளை கேட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here