இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கி பரிசோதனைகளை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நேற்று 5 லட்சம் கருவிகள் இந்தியா வந்தடைந்தது.
தமிழகத்திற்கு 24 ஆயிரம் கருவிகள்:
தமிழகத்தில் இதுவரை 1200க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பரிசோதனைகளை துரிதப்படுத்த அரசு சார்பில் சீனாவிடம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த கருவிகள் மூலம் கொரோனா நோய்த்தொற்றை விரைவில் கண்டறிய இயலும். நேற்று இந்தியா வந்தடைந்த 5 லட்சம் கருவிகளில் 24 ஆயிரம் கருவிகள் தற்போது சென்னை வந்தடைந்து உள்ளன.
24 மணிநேரத்தில் 1001 பேருக்கு பாதிப்பு – இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா..!
ஊரடங்கை மீறியதாக 2 லட்சம் பேர் கைது, 98 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் – தமிழக காவல்துறை அதிரடி..!
இந்த ரேபிட் கிட்கள் மூலம் விரைவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தாக்கம் குறித்த முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது முதல்கட்டமாக தமிழகத்திற்கு 24 ஆயிரம் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |