தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிமுதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நிவாரண அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் அறிவித்தார்.
தடுப்பு நடவடிக்கைகள்:
தமிழகத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழக அரசு ரூ. 3250 கோடி ரூபாய் ஒதுக்கி பல்வேறு நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி,
- ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை மக்கள் விலையின்றி இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.
- 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 2 நாள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும்.
- நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும்.
- அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும்.
- அம்மா உணவகங்களில் சூடான, சுகாதாரமான உணவுகள் வழங்கப்படும்.
- நாகையில் இருந்து பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- அங்கன்வாடி மையங்களில் முதியோர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |