இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று – குணமடைந்தவர்கள் விகிதம் அதிகரிப்பு!!

0

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதமும் தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா:

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸில் இருந்து மீள தொடங்கியுள்ளன. மேலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கியும் வருகிறது. இதன் வரிசையில் தற்போது அவசரகால பயன்பாட்டிற்காக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனாவின் வேகம் குறைந்து வருவதாகவும் மற்றும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,083 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,20,048 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 137 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,54,147 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 14,808 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.04,09,160 ஆக உயர்ந்துள்ளது.

‘இன்னைக்கு ஒரு புடி’ – வில்லேஜ் குக்கிங் யூடியூப் கிராமத்து சமையலர்களுடன் ராகுல் காந்தி!!

இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 96.98% ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிர் இழந்தவர்களின் விகிதம் 1.44% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 7,56,329 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 19,58,37,408 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,69,824 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here