ஜூன் 3க்கு முன்பு கொரோனா நிவாரண இரண்டாவது தவணை – தமிழக அரசு அதிரடி!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்பரவல் அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனை இரண்டு தவணையாக பிரித்து வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக அரசு:

தமிழகத்தில் சுமார் இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது, தற்போது ஊரடங்கு காரணமாக பல தரப்பு மக்கள் வேளைக்கு செல்லாமல் வருமானத்திற்கு துன்பப்பட்டு வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனை கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், தான் பதவி ஏற்றுக்கொண்ட முதல் நாளிலே அதிரடியான அறிக்கை ஒன்றை அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இதனை இரண்டு தவணையாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

‘உங்கள நம்புனதுக்கு என்ன வச்சி செஞ்சிடீங்க’ – பிரபுதேவாவை அசிங்கப்படுத்திய முன்னணி நடிகர்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கான முதல் தவணை ரூ.2000 கடந்த வாரம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் இரண்டாவது தவணையாக ரூ.2000 மறைந்த முன்னாள் முதல்வரும் மற்றும் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதிக்கு முன்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது இந்த தகவலினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here