இந்தியாவில் ஆதிக்கத்தை குறைக்கும் கொரோனா வைரஸ் – பல மாதங்களுக்கு பின்பு 2 லட்சத்திற்கும் குறைவான பாதிப்பு!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த செய்தி தற்போது நாட்டு மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்து வருகிறது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் மூன்று மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில் தற்போது இதன் வீரியம் குறைந்துள்ளது. அதன்படி பல மாதங்களுக்கு பின்பு பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,96,427 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,69,48,874 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் 3,511 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். சுமார் 20 நாட்களாக 4 ஆயிரத்தை தாண்டி வந்த பலி எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டில் கொரோனாவால் மொத்தம் 3,07,231 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு !!!

மாவட்ட ஆட்சியரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி - மக்கள் ஷாக்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நேற்று ஒரே நாளில் 3,26,850 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,40,54,861 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை 25,86,782 ஆக உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here