இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் – ஒரே நாளில் 4,194 பேர் பலி!!

0

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் நேற்று இந்தியாவில் மேலும் 4,194 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலை இரண்டாம் அலை என்று மக்களை சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக தாக்கி வருகிறது. இந்நிலையில் தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, ஆனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,57,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,62,89,290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் வைரஸால் 4,194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,95,525 ஆக உயர்ந்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

விஜய் சேதுபதியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள் – இதுதான் காரணமா??

மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3,57,630 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,30,70,365 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 29,23,400 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் 20,66,285 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாட்டில் பரிசோதனை மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை 32,64,84,155 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here