கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடம் – மத்திய சுகாதாரத்துறை பகிர் தகவல்!!

0

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் எதிரொலியாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை மிக கடுமையாக தாக்கி வருகிறது. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிக அதிகமான அளவு இறப்பு சதவிகிதம் பதிவாகியுள்ளது. இந்த தகவலினால் மக்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று ஏறுமுகத்தில் இருந்து வருவதால் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையும் மிக கடுமையாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை ஓர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

‘உன் ஆசைய நான் நிறைவேற்றுவேன் மாமா’ – உருக்கமான பதிவை பதிவிட்ட புகழ்!!

அதன்படி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்தது. இந்த தகவல் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தற்போது கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டும் தமிழகத்தில் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது என்று மக்கள் தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here