தூத்துக்குடியில் அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா.வின் உடல் தகனம் செய்யப்பட்டது.
எழுத்தாளர் கி.ரா.வின் உடல் தகனம்:
கரிசல் இலக்கியத்தின் தந்தையான எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடல் அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் தமிழக அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற 99 வயதான எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயதுமுப்பால் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் காலமானார்.
இதனை தொடர்ந்து புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட பலரும் கி.ரா.வின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து கி.ரா.வின் உடல் அவர் சொந்த ஊரான இடைச்செவல் கிராமத்திருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி இடைச்செவல் கிராமத்திருக்கு வந்த அவரது பிரேதம் மதியம் 12 மணியளவில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தமிழக வரலாற்றில் எழுத்தாளர் ஒருவருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது இதுவே முதல்முறை.