மீண்டும் லாக்டவுனுக்கு வாய்ப்பா??இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!!

0

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது இந்தியாவில் மீண்டும் லாக்டவுனுக்கு வாய்ப்புள்ளதா என்று மக்கள் அச்சமடைந்த வருகின்றனர்.

கொரோனா:

கடந்த சில மாதங்களாக கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் தலையோங்கியுள்ளது. சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேர்தத்தில் கொரோனாவால் புதிதாக 17,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,12,62,707 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேர்தத்தில் கொரோனாவால் 133 பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால் மொத்த உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,58,063 ஆக அதிகரித்துள்ளது.

#INDvsENG டி 20 தொடர் – நடராஜன் விளையாடுவதில் சிக்கல்!!

நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 20,652 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,20,046 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 1,84,598 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 96.96% ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here