இந்தியாவில் தொடரும் கொரோனாவின் தாக்கம் – ஒரே நாளில் 3,847 பேர் பலி!!

0

இந்தியாவில் கடந்த 40 நாட்களில் ஏற்பட்ட பாதிப்பின் விகிதம் தற்போது சற்று குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் சுமார் மூன்று மாத காலமாகவே கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. கடந்த 40 நாட்களில் ஏற்பட்ட பாதிப்பை ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவில் ஏற்படும் பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,11,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,73,69,093 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 3,847 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பின் எண்ணிக்கை 3,15,235 ஆக அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லாக்டவுன்ல பிறந்தநாள் மாட்டிக்கிச்சே – கதறும் ராஜா ராணி நடிகர்!!

நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,83,135 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,46,33,951 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் 20,26,95,874 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here