விஜய் டிவியில் அறிமுகமாகி சீரியலில் ஒன்றாக நடித்து பின்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ராஜா ராணி பிரபலங்கள் சஞ்சீவ் மாற்றம் ஆலியா. இந்நிலையில் தற்போது சஞ்சீவ் தன் இன்ஸ்டா பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சஞ்சீவ்:
விஜய் டிவியில் மிக பிரபலமாக ஓடி இரண்டு தொடராக அவதாரம் எடுத்துள்ள சீரியல் தான் ராஜா ராணி. இதன் முதல் பாகத்தில் நடிகராக சஞ்ஜீவ் மற்றும் நடிகையாக ஆலியா நடித்தனர். இந்த தொடர் மக்கள் மத்தியில் மிக அதிக அளவிலான வரவேற்பை பெற்றது. மேலும் இந்த சீரியலில் ஒன்றாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா காதலித்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியானது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனை ஒப்புக்கொண்ட சஞ்சீவ் மற்றும் ஆலியா பின்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அதற்கான விழாவும் விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக நடந்தது. தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. மேலும் மக்களுக்கு மிக பிடித்த கியூட்டான பேர் யார் என்றால் அது சஞ்சீவ் மற்றும் ஆலியா தான்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரம் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!
இந்நிலையில் தற்போது இவர்கள் ஓர் யூ டியூப் சேனலை தொடங்கி அந்த சேனல் மக்கள் மத்தியில் செம ரீச் ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆலியா தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் ‘லாக்டவுன்ல உன் பிறந்தநாள் மாட்டிக்கிச்சே பாப்பு’ என்று சோகமான பதிவை செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.