குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான தருணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மணிமேகலை
விஜய் டிவியில் மக்களின் பேவரைட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 1ல் இருந்து ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த வந்தவர் தான் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை. அதே போல் குக் வித் கோமாளி சீசன் 4லிலும் தனது குறும்பு தனத்தால் மக்களை சிரிக்க வைத்த மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக பிப்ரவரி 26ம் தேதி சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் என்னாச்சு, ஏதாச்சு என்று மணிமேகலையிடம் கேட்க தொடங்கினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இவர் அடுத்ததாக என்ன செய்ய போகிறார் என்று ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மணிமேகலை தனது கிராமத்தில் நிலம் வாங்கி போட்டு இருப்பதாகவும், அதில் விவசாயம் செய்ய போவதாகவும் இணையத்தில் பேச்சுக்கள் அடிபட்டது. இந்த நிலையில் புதிதாக ஒரு புகைப்படத்தை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
வடக்கன்ஸை ஓட்டி தள்ளிய சுதாகர் – கோபி.., பொறியாளர் சங்கத்திடம் இருந்து பறந்த புகார்!!
அதாவது மணிமேகலையும் அவருடைய கணவர் ஹுசைனுடன் சேர்ந்து பாலக்கால் பூஜை நடத்தியுள்ளனர். அங்கு HM என்ற பெயரில் பண்ணை மாளிகை ஒன்றை கட்ட போவதாக தெரிவித்துள்ளனர். மேலும், கடவுளின் ஆசிர்வாதத்தாலும், எங்களுடைய உழைப்பாலும் எங்களின் குட்டி சாம்ராஜ்ஜியத்தை தொடங்கியுள்ளோம். இனிமேல் நாங்க கிராமத்திற்கு வந்தால் இந்த வீட்டில் தான் சந்தோஷமாக இருக்க போகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.