காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.,யும் ஆன மோதிலால் வோரா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவிற்கு தற்போது தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் பாதிப்பு:
கொரோனா நாட்டில் பரவ ஆரம்பித்ததில் இருந்து பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பாதிப்பினை சந்தித்து வந்தனர். அவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான மோதிலால் வோரா ஆவர். அவரது வயது மூப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின், சிகிச்சைகள் முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அவர் தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும் தான் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும் தெரிவித்தார். இப்படியான நிலையில், அவர் மீண்டும் நேற்று இரவு டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். நேற்று தனது 93வது பிறந்தநாளை கொண்டாடியவர் இன்று மரணம் அடைந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்??
இவரது மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வோரா மேல் நேஷனல் ஹெரால்ட் செய்தித்தாளின் சொத்து தொடர்பான வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.