முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!!

0

இந்தியா தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங்க் உடல் நல குறைவால் காலமானார். இவர் இன்று காலை 5.30 மணி அளவில் காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவரது மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பூட்டா சிங்க்:

இவர் இந்தியா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சரும் ஆவர். இவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பீகாரின் ஆளுநராக இருந்தார். அதன் பின்பு 2007 முதல் 2010 வரை தேசிய தாழ்த்தப்பட்டோரின் ஆணைய தலைவராகவும் திகழ்ந்தார். மேலும் இவர் எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் சில காலங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த அக்டோபர் மாதம் சுயநினைவு இழந்ததால் இவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்பு மூலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் வெளியேற போகும் நபர் இவர் தான் – லீக்கான தகவல்!!

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இவர் இன்று காலை 5.30 மணி அளவில் தனது உயிரை இழந்துள்ளார் என்று இவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தற்போது இவரது மறைவுக்கு காட்சி தலைவர்கள், ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி போன்றோர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here