TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
TNPSC
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 4 ல் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் பலருக்கு சாதகமாக அமைத்தாலும் சிலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகளில் பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக தேர்வர்கள் புகார் அளித்து வருகின்றனர். அதாவது குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் overall, communal ரேங்க் இரண்டுமே குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை விட குறைவாக இருக்க வேண்டும்.
இனி மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்கு புதிய கட்டுப்பாடு.., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ஆனால் அதற்கு மாறாக நேற்று வெளியான TNPSC தேர்வு முடிவுகள் இருந்தது. அதாவது அதிக மதிப்பெண் பெற்றவர்களை காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தான் overall, communal ரேங்க் மிகவும் குறைந்துள்ளது.
இதனால் குறைவான மார்க் எடுத்தவர்கள் முன்னிலையிலும், அதிக மார்க் எடுத்தவர்கள் தரவரிசையில் பின்னுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை தேர்வர்களின் பதிவெண் உடன் கூடிய தரவரிசையை TNPSC வெளியிட்ட நிலையில் தற்போது இதை நிறுத்தியுள்ளனர். இதனால் தான் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருவதாக தேர்வர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.