வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரு தினங்களுக்கு முன் குமரிக்கடல் பகுதியில் வலுவிழந்தது. இதனால், ஏற்பட்ட கனமழையால் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து, சேதமடைந்த விவசாய நிலங்களை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த குழுவின் அறிக்கை இன்று (பிப்ரவரி 6) சமர்ப்பிக்கப்பட்டது. இதை பரிசோதித்த முதல்வர், “33% மேல் சேதமடைந்த நெற்பயிர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தமிழக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இதேபோல், இளம் பயிர் சேத நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3000 இழப்பீடாக வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார். இதுபோக, பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு 8 கிலோ பயிறு விதைகள் 50% மானியத்தில் தரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.