இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் தங்கர்பச்சான்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை இயக்கி தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கியவர் தான் இயக்குனர் தங்கர்பச்சான். இவர் சினிமாவில் முதலில் ஒளிப்பதிவாளராக உள்ளே நுழைந்து, தற்போது இயக்குனர், நடிகர் என பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் இவர் கடைசியாக நடித்த களவாடிய பொழுதுகள், டக்கு முக்கு திக்கு தாளம் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு ரீச் அடையவில்லை. தற்போது, இவர் மீண்டும் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, தங்கர்பச்சான் தற்போது “கருமேகங்கள் கலைகின்றன” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி பாலன் லீடு ரோலில் நடிக்கிறார். அது போக இயக்குனர் பாரதிராஜா, கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் S.A சந்திரசேகர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படி மூன்று இயக்குனர்கள் நடித்து வரும் இந்த படத்தில், தற்போது தங்கர் பச்சானும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் கம்பேக் கொடுப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எதுவும் கிடைக்காம வீட்டுல தனியா அவளோ கஷ்டப்பட்டேன்.., மனம் திறந்த நடிகர் தனுஷ்!!